Sunday 15 April 2012

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 29.04.2012 முதல் 31.05.2012 வரை கோடை விடுமுறை எனவும், கோடை விடுமுறை முடிந்து 2012-13 ஆம் கல்வி ஆண்டில் 01.06.2012 வெள்ளிக் கிழமை அன்று பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.



தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு  29.04.2012 முதல் 31.05.2012 வரை கோடை விடுமுறை எனவும், கோடை விடுமுறை முடிந்து 2012-13 ஆம் கல்வி ஆண்டில் 01.06.2012 வெள்ளிக் கிழமை அன்று பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

கல்வி அதிகாரிகள் சந்திப்பும் பெறப்பட்ட தகவல்களும்



தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மா. குமரேசன், மாநில அமைப்புச் செயலாளர் க. இசக்கியப்பன், சென்னை மாவட்டத் தலைவர் கயத்தாறு ஆகியோர் 10.04.2012 அன்று சென்னையில் பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களைச் சந்தித்தனர்.
  • கல்வித்தகுதி 10+2+3 இருந்தால் மட்டுமே பதவி உயர்வு என்பதற்கு விலக்கு அரசிடம் கோரப்பட்டு உள்ளது. அரசின் பதிலின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என மதிப்புமிகு பள்ளிக்கல்வி இணை இயக்குனர் திருமதி. ராஜ ராஜேஸ்வரி உறுதி அளித்தார்கள். மதிப்புமிகு பள்ளிக்கல்வி செயலரும் வழக்கு தீர்ப்பை படித்து நல்ல முடிவு எடுப்பேன் என்றார்கள்.
  • தமிழாசிரியர் பதவி உயர்விற்கு 1310 பேர் உள்ளனர். இதில் +2 முடிக்காதவர்கள் பெயரும் இடம் பெற்றுள்ளது எனவும் 1998 ஜூலை வரை சுமார் 1100 பேர் இடைநிலை ஆசிரியர்களிலிருந்து தமிழாசிரியராக பதவி உயர்வு (2012-2013 கல்வியாண்டு) வழங்கப்படும் என தெரிகின்றது. மற்ற பாடங்களுக்கு இறுதி பட்டியல் தயாரிக்கவில்லை. இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்றார்.
  • கன்னியாகுமரி மாவட்டம் S.L.B. அரசு மேல்நிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியரும் நமது அமைப்பின் நாகர்கோவில் நகர செயலாளருமான செல்வராஜ் 19.03.2010 முதல் 23.10.2011 வரை சம்பளம் தொடர்பாக கோப்பு 09.04.2012ல் J.D.P. ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. பள்ளிக்கலவி செயலருக்கு இந்த வாரத்தில் அனுப்பப்படும் என கூறினார்கள்.
  • ஆசிரியர் பணியிட மாறுதல் மே இறுதியிலும் பதவி உயர்வு மாறுதல் ஜூனிலும், ஆகஸ்டு இறுதிக்குள் புதிய நியமனங்களை நடத்திட கேட்டுக் கொள்ளப்பட்டது.
  • 23.08.2010க்கு முன்பு இடைநிலை ஆசிரியராக பணியாற்றி பட்டதாரி தமிழாசிரியர் பதவி உயர்வு பெற்றவர்கள் யாரும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத தேவையில்லை. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை D.E.O. அப்படி ஒரு சுற்றறிக்கை அனுப்பி பின் நமது சங்கத்தின் முயற்சியால் வாபஸ் பெற்றுள்ளார் என்பதை தகவலுக்கு தருகின்றோம். எனவே 23.08.2010க்கு முன்பு நியமனம் பெற்ற எந்த ஒரு ஆசிரியரும் தகுதி தேர்வு எழுத தேவையில்லை.
  • அரசாணை எண் 123, நாள் 10.04.2012 ஊதியக் குழு முரண்பாடு களைவதற்கான கமிட்டியில் ஊதியக்குழு பாதிப்புகளை உடனடியாக கொண்டு செல்ல உள்ளோம். 
 -க. இசக்கியப்பன்,
மாநில அமைப்புச் செயலாளர்.
.

பட்டதாரிகளாக உட்படுத்துதல் கோரிக்கையும் பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் சந்திப்பும்


தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மா. குமரேசன், மாநில அமைப்புச் செயலாளர் க. இசக்கியப்பன், சென்னை மாவட்டத் தலைவர் கயத்தாறு ஆகியோர் 10.04.2012 அன்று இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை நிலை குறித்து அறிந்துகொள்ள சென்னையில் பள்ளிக்கல்வித் துறை அலுவலர்களைச் சந்தித்தனர். 

பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) 

பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) அவர்களை சந்தித்து இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை நிலைகுறித்து கேட்டறிந்தனர். 8000 பேர் பட்டதாரி/தமிழாசிரியர் தகுதியுடன் அரசுப் பள்ளிகளில் இருப்பதாகவும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை கோரப்பட்டுள்ளது என்றும் இது குறித்து பள்ளிக்கல்வி செயலருக்கு தகவல் அனுப்பப்படும் என்றும் தெரிவித்தார். 

பள்ளிக்கல்வி இயக்குனர் 
பள்ளிக்கல்வி இயக்குனர் நாம் வைக்கும் கோரிக்கை என்ன என்பதை கூட புரிந்து கொள்ளாமல் நீங்கள் சொன்னதை எல்லாம் செய்யமுடியாது என்கிறார். உயர் மேல்நிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர்களை தொடக்கக்கல்வித் துறைக்கு அனுப்பி வைத்துவிடுவேன் என்று கூறுகின்றார். பொறுப்புள்ள அதிகாரி இப்படி பேசுவது மன வேதனை அளிக்கின்றது. 

கோரிக்கையை புரிந்து அதன் மீது செயலர் அளவிற்கு கடித தொடர்பை ஏற்படுத்தியவர் முந்தைய பள்ளிக்கல்வி இயக்குனர் திரு. பெருமாள்சாமி அவர்கள். எனவே மதிப்புமிகு பள்ளிக்கல்வி இயக்குனர் திரு. மணி அவர்கள் இயக்குனர் அலுவலக கடந்த கால கோப்புகளை படித்து அதன்படி எங்களுக்கு பதில் சொல்ல வேண்டும். நாங்கள் சொன்னதை தற்போது வரை எதையும் செய்ததாக தெரியவில்லை. நியாயமான கோரிக்கை குறித்து பரிசீலித்து எங்கள் அமைப்பை அழைத்து பேசி நிரந்தர தீர்வு ஏற்படுத்திட முயற்சி செய்திட இயக்குனர் அவர்களை கேட்டுக் கொண்டோம். 

பள்ளிக்கல்வி செயலர் & பள்ளிக்கல்வி அமைச்சர் 
பள்ளிக்கல்வி செயலர், பள்ளிக்கல்வி அமைச்சர் ஆகியோரிடமும் இது குறித்து கோரிக்கை மனு அளித்தோம். மானிய கோரிக்கைக்கு முந்தைய விவாத கூட்டத்தில் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படலாம் என தெரிகின்றது. 

பின்னர் ஏப்ரல் 18-ல் நடைபெறும் பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கையில் பட்டதாரி ஆசிரியர்களாக இடைநிலை ஆசிரியர்களை உட்படுத்திட வலியுறுத்தி பேசிட கோரிக்கை மனுவை சட்டமன்றக் கட்சி தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்களிடம் அளித்து விடைபெற்றோம்.

மொத்தத்தில் நமது சந்திப்புகள் பயனுள்ளதாக அமைந்திருந்தது.

-க. இசக்கியப்பன்,
மாநில அமைப்புச் செயலாளர்.
.
MyFreeCopyright.com Registered & Protected