Sunday 29 April 2012

PROMOTION PANELS 2012-13


                    PROMOTION PANELS 2012-13 

                              AS ON 01-01-2012

HR.SEC HM PROMOTION FROM PG & HIGH SCHOOL HM

S.G TO B.T ASST. PROMOTION (SCIENCE).

S.G TO B.T ASST. PROMOTION (HISTORY).

S.G TO B.T ASST. PROMOTION (GEOGRAPHY).


தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறைக்கான ( CCE) ஆசிரியர் தெளிவுரை

விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1


விண்ணில் வெற்றிகரமாகசீறிப்பாய்ந்தத ரிசாட்-1

இஸ்ரோவால் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய செயற்கைகோளான ரீசாட்-1 ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 5.47 மணியளவில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
சுமார் 380 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த செயற்கைகோள் வானிலை சம்பந்தமான துறைகளுககும், மற்றும் அனைத்து விதமான துறைகளுக்கும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் பகல், இரவு,மற்றும் மேகமூட்டம் அதிகமாக உள்ள காலகட்டங்களிலும் புகைப்ப‌டங்களை எடுத்து அனுப்பும் திற‌மை கொண்டது.
சரியான பாதை‌யில் செல்கிறது; திட்டமிட்டபடி வெற்றிகரமாக சீறிப்பாய்ந்த ரிசாட்-1 சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 1858 கிலோ எடை ‌கொண்ட இந்த செயற்கை கோளின் திட்ட இயக்குனர் விஞ்ஞானி வளர்மதி , தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
நீண்ட தூர கவுன்ட் டவுன்கள்: முன்னதாக 72 மணி நேர கவுன்ட் டவுன்கடந்த திங்கட்கிழமை முதல் துவங்கி திட்டமிட்டபடி இன்று காலை இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆவலுடன் காத்திருக்க 5.47 மணியளவில் விண்ணில் சீறிப்பாய்ந்தது. விஞ்ஞானிகள் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.
பயன்கள்:ரிசாட் இரவு மற்றும் பகல் என எந்த நேரத்திலும் காலநிலை குறித்து துல்லியமாக புகைப்படத்தி‌னைஅனுப்பும் திறன் கொண்டது.
10ஆண்டு கனவு: ரிசாட்-1 வக‌ை செயற்கைகோள் 10 ஆண்டு கால விஞ்ஞானிகளின் உழைப்பில் இந்தயாவிலே‌யே தயாரிக்கப்பட்ட செயற்கைகோள் ஆகும். கடந்த 2009-ம்ஆண்டில் செலுத்தப்பட்ட ரிசாட்-2 செயற்கைகோள் ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர‌ரெட்டியின் ஹெலிகாப்டர் விபத்தை துல்லியமாக கண்டுபிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது ஏவப்பட்ட ரிசாட் 1 வகை செயற்கைகோள் தன்னுடைய இலக்கை 596 கி.மீ., தொலைவில் உள்ள புவிவட்ட பாதையை அடைந்துள்ளது.
விஞ்ஞானிகள் பெருமிதம்: தனிச்‌சிறப்பு வாய்ந்த தொழில் நுட்பம் மற்ற நாடுகளின் உதவியில்லாமல் நம்முடைய ‌‌தொழி்ல்நுட்பத்தில் உருவாகியுள்ளது. இதற்கு முன்னதாக இஸ்ரேல் உதவியுடன் விண்ணில் செலுத்தப்பட்டது. தற்போதைய ரிசாட் -1 விண்ணில் ‌செலுத்தப்பட்டதன் மூலம் ‌ஒரே புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
அதி நவீன தொழில் நுட்பம்: தற்போது ஏவப்பட்ட ரிசாட்-1 செயற்கைகோளில் எஸ்.ஏ.ஆர் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 1மி.மீ நீள, அகலமுள்ள பொருட்களை துல்லியமாக படம்பிடிப்பதுடன் எதிரி நாடுகளின் ராணுவ நடமாட்டத்தை துல்லியமாக கண்டறிய முடியும்.இருப்பினும் இதுகுறித்து தகவலை இஸ்ரே வெளியிடவில்லை . மேலும் அகமதாபாத்தில் உள்ள இஸ்ரோ ‌தொழில் நுட்ப பிரிவில் உருவாக்கப்பட்டுள்ளது
.
தானிய உற்பத்தியை அதிகரிக்க பயன்படும்: ரிசாட்-1 செயற்கை கோள் தானிய உற்பத்தியை அதிகரிப்பதி்ல பெரும் பங்கு வகிக்க உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கோதுமை பயிரிடும் பரப்பளவு தேவைப்படும் நீரின் அளவு போன்றவற்றையும் துல்லியமான தகவல்களை தர வல்லது.

கல்வி இணை செயல்பாடுகளில் பகுதி நேர ஆசிரியர்கள் : இணை இயக்குனர் பழனிச்சாமி தகவல்


கல்வி இணை செயல்பாடுகளில் பகுதி நேர ஆசிரியர்கள் : இணை இயக்குனர் பழனிச்சாமி தகவல்

"கல்வி இணை செயல்பாடுகளில், பகுதி நேர ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவர்' என, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி இணை இயக்குனர் பழனிச்சாமி தெரிவித்தார்.

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முப்பருவ கல்வி முறை, இந்தாண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான, "தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு' முறை குறித்த பயிற்சி, ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம், மண்டபம் ஒன்றியங்களில் நடந்த பயிற்சியை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி இணை இயக்குனர் பழனிச்சாமி ஆய்வு செய்து பேசியதாவது:
வரும் கல்வி ஆண்டிலிருந்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜூன் முதல் செப்டம்பர் வரை ஒரு பருவமும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை ஒரு பருவமும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஒரு பருவமும் நடத்தப்படுகிறது. ஒரு பருவத்துக்கு ஒரு புத்தகம் மட்டுமே. இந்தியாவில் முதன் முதலாக தமிழகத்தில் தான் இவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் முக்கிய நோக்கம், மாணவர்களின் செயல்பாடுகளை அதிகப்படுத்துவது. மாணவர்கள் எதில் திறமையாக இருக்கின்றனரோ அதில் ஈடுபடுத்துவது.

இதன் மூலம் கல்வியைத் தவிர, மற்ற இணைச் செயல்களான வாழ்க்கை கல்வி, தையல், ஓவியம், விளையாட்டு உள்ளிட்டவற்றில் திறன் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பணியில், 16 ஆயிரத்து 450 பகுதி நேர ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவர். ஆசிரியர்களும் இதில் பங்கேற்க வேண்டும்.

முப்பருவ கல்வி முறையில், 40 மதிப்பெண்கள் வளரறி மதிப்பீடாகவும் (செயல்பாடுகளை வைத்து), 60 மதிப்பெண்கள் தொகுத்தறி மதிப்பீடாகவும் (தேர்வு முறையில்) வழங்கப்படும். செயல்வழி கற்றல் முறை (அட்டை முறை) இதனால், மூன்றில் ஒரு பங்கு குறைக்கப்பட்டுள்ளது.

அடுத்தாண்டு, ஒன்பதாம் வகுப்பு, அதற்கு அடுத்த ஆண்டு, 10ம் வகுப்பில், இந்த முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்படும்.

இவ்வாறு பழனிச்சாமி கூறினார். 
MyFreeCopyright.com Registered & Protected