இது அனைத்து கல்வி தகவல்களின் சுரங்கம்******ஆக்கம் :.வெ.இராஜசேகரன். அ.மே.நி.பள்ளி பாரூர்.கிருஷ்ணகிரி (மா.வ) 635201 Email:rssanjayk@gmail.com
Saturday 30 June 2012
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் ஜூலை 13-ந் தேதி தொடங்குகிறது.
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல்-பதவி உயர்வு கவுன்சிலிங் அடுத்த மாதம் (ஜுலை) 13-ந் தேதி தொடங்கி, 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் பள்ளிக்கல்வி இயக்குனர் பி.மணி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பட்டதாரி ஆசிரியர் பணிநிரவல், இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான உத்தேச கால அட்டவணை கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
பணிநிரவல் கவுன்சிலிங்
|
||
1
|
ஜுலை 13 மற்றும் 14-ந் தேதி (வெள்ளி, சனி)
|
மாவட்டத்திற்குள் பணிநிரவல் (அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும்)
|
2
|
16 மற்றும் 17-ந் தேதி (திங்கள், செவ்வாய்)
|
மாவட்டம் விட்டு மாவட்டம் பணிநிரவல்
|
இடமாறுதல் கவுன்சிலிங்
|
||
3
|
23-ந் தேதி (திங்கள்) - இடமாறுதல் கவுன்சிலிங்
|
அதே மாவட்டம்- அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர்களும்
|
4
|
24-ந் தேதி (செவ்வாய்) - இடமாறுதல் கவுன்சிலிங்
|
வெவ்வேறு மாவட்டம்-அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர்களும்
|
5
|
27-ந் தேதி (வெள்ளி)
|
ஆசிரியர் பயிற்றுனர் பட்டதாரி ஆசிரியராக பணிமாறுதல்
|
பதவி உயர்வு கவுன்சிலிங்
|
||
6
|
30-ந் தேதி (திங்கள்)
|
பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) - ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்கள்
|
Friday 29 June 2012
பான் கார்டின் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா!
Posted: 28 Jun 2012 06:30 PM PDT
நம்மில் பலரிடமும் பான் கார்ட் உள்ளது (Permanent Account Number-PAN). ஆனால், பலருக்கும் இதன் முக்கியத்துவம் தெரிவதில்லை. பான் கார்ட் பற்றிய சில விளக்கங்கள் இதோ...
பான் கார்ட் என்பது 10 இலக்க எழுத்து-எண் கொண்ட அட்டை. இதை வழங்குவது வருமான வரித்துறை. இந்த அட்டை கோரி விண்ணப்பித்து இதைப் பெறலாம்.
சிலருக்கு வருமான வரித்துறை தானாகவே இந்த அட்டையை வழங்கும். ஒரு தனிப்பட்ட நபர் வரி செலுத்தினாரா, வரிப் பிடித்தம் நடந்ததா, அவரது வங்கிக் கணக்கில் நடந்த பரிமாற்றம் உள்ளிட்ட விவரங்களை வருமான வரித்துறை பெற பான் கார்ட் உதவுகிறது. பான் கார்டில் உள்ள எண்-எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஒரு குறியீடாகும். அதைத் தெரிந்து கொள்வோம். உதாரணத்துக்கு பான் கார்ட் எண் AFZPK7190K என்று வைத்துக் கொள்வோம். முதல் 3 எழுத்துக்கள் வரிசை எண்களாகும். 4வது எழுத்து தனிப்பட்ட நபரின் கார்டா அல்லது ஒரு தொழில் நிறுவனத்தின் கார்டா என்பதை குறிக்கிறது. “P” என்றால் அது தனிப்பட்ட நபருடையது. “F” என்றால் Firm, “C” என்றால் Company, “T” என்றால் டிரஸ்ட் (அறக்கட்டளையுடையது) என்று பொருள். 5வது எழுத்து பான் அட்டை வைத்திருப்பவரின் கடைசி பெயரின் முதல் எழுத்தாகும். அடுத்து வரும் எண்கள் வரிசை எண்களாகும். இது 0001ல் ஆரம்பித்து9999 வரை செல்லும். கடைசி எழுத்தும் வரிசை எண் தொடர்புடையது தான். பான் கார்ட் வைத்திருப்பது கட்டாயமா? ஆமாம். பான் கார்ட் மிக மிக அவசியமானதே. வங்கியில் பணப் பரிமாற்றத்துக்கும், வருமான வரித்துறைக்கு நமது கணக்குகளை சமர்பிக்கவும் இது கட்டாயமாகும். எப்படி இதைப் பெறுவது? வருமான வரித்துறையின் Form 49 விண்ணப்பத்தில் இதைக் கோரி விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பப் படிவத்தைhttp://www.incometaxindia.gov.in/, http://www.utiisl.co.in/ or tin-nsdl.com ஆகிய இணையத்தளங்களின் டவுன்லோட் செய்து கொள்ளலாம். மேலும் வருமான வரித்துறையின் ஐடி பான் சர்வீசஸ் மையத்திலும், டிஐஎன் மையங்களிலும் இதைப் பெறலாம். உங்களிடம் பான் கார்ட் இருந்து அது குறித்த மேலும் விவரங்களைப் பெற https://incometaxindiaefiling. இந்திய குடிமகன்கள் தான் பான் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு கீழ்கண்ட அடையாள சான்றிதழ்களில் சில அவசியம். 1. பள்ளி டிசி 2. பிளஸ் டூ சான்றிதழ் 3. கல்லூரி் சான்றிதழ் 4. வங்கிக் கணக்கு விவரம் 5. கிரடிட் கார்ட் ஸ்டேட்மென்ட் 6. வாட்டர் பில் 7. ரேசன் கார்ட் 8. வீட்டு வரி ரசீது 9. பாஸ்போர்ட் 10. வாக்காளர் அட்டை 11. ஓட்டுனர் உரிமம் 12. எம்பி அல்லது எம்எல்ஏ அல்லது கவுன்சிலர் அல்லது கெஜட்டட் அதிகாரியிடம் பெறப்பட்ட Certificate of identity கடிதம் அதே போல விலாசம் தொடர்பாக கீழ்கண்ட சான்றிதழ்களில் சிலவும் அவசியம். 1. மின் கட்டண ரசீது 2. தொலைபேசி கட்டண ரசீது 3. வங்கிக் கணக்கு விவரம் 4. வீட்டு வாடகை ரசீது 5. பணியாற்றும் நிறுவனத்திடம் பெறும் கடிதம் 6. பாஸ்போர்ட் 7. வாக்காளர் அடையாள அட்டை 8. வீட்டு வரி ரசீது 9. ஓட்டுனர் உரிமம் 10. ரேசன் கார்டு 11. எம்பி அல்லது எம்எல்ஏ அல்லது கவுன்சிலர் அல்லது கெஜட்டட் அதிகாரியிடம் பெறப்பட்ட Certificate of identity கடிதம் விண்ணப்பிப்பவர் 18 வயதுக்குக் குறைவான மைனராக இருந்தால், அவரது பெற்றோர் அல்லது கார்டியனின் சான்றிதழ்களே போதுமானவை. |
பட்டதாரி ஆசிரியர் நியமனம்: ஜூலை 1-ல் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு
பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களை (2010-11) பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்புவதற்காக ஜூலை 1-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மீண்டும் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்
பணியிடங்களை (2010-11) நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்ததால், அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதன்படி, சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளாதவர்கள் ஜூலை 1-ம் தேதி மீண்டும் கலந்துகொள்ளலாம். இதற்கான அழைப்புக் கடிதம் கிடைக்கவில்லையென்றாலும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலை நகல் எடுத்தும் கலந்துகொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
Thursday 28 June 2012
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில அமைப்புச் செயலாளர்
க. இசக்கியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை:
அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இடைநிலை ஆசிரியர்கள் சிறப்பாசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்படவில்லை. இதனால் உயர் / மேல் நிலைப்பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.
பல்வேறு உயர் / மேல் நிலைப்பள்ளிகளில் ஒரே பாடத்திற்கு தேவைக்கு அதிகமான பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். வேறு சில பள்ளிகளில், குறிப்பிட்ட பாடங்களுக்கு ஆசிரியர் இல்லை. தமிழக பள்ளிக் கல்வித்துறை 32 வருவாய் மாவட்டங்களிலும் உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை 2012 மே மாதத்தில் கணக்கெடுத்துள்ளது. ஒரே பள்ளியில் பணியாற்றும் கூடுதல் பட்டதாரி ஆசிரியர்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு தேவையின் அடிப்படையில் பணிமாறுதல் செய்திட உத்தேசித்துள்ளது. உதாரணமாக, ஒரு பள்ளியில் வரலாறு பாடம் நடத்த தேவைக்கு அதிகமாக இரண்டு ஆசிரியர்கள் இருந்தால், அதில் ஒருவர், வரலாறு ஆசிரியர் இல்லாத பள்ளிக்கு பணியிடத்துடன் கூடிய பணியிட மாறுதல்(Deployment) செய்யப்படுவார். இதுபோல பணியிட மாறுதல் செய்த பின், காலியாக உள்ள இடங்களுக்கு மாறுதல் கவுன்சிலிங் நடக்கும்.
பெரும்பான்மையான மாவட்டங்களில் இந்தப் பணிகள் முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மூலமாக நிறைவடைந்துள்ளது. சில மாவட்டங்களில் பள்ளிகளில் குறைவான தேவையே இருப்பதால் இப்பணி முழுமை அடையவில்லை. வருகிற 28, 29-ம் தேதி நடைபெறும் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வில் ஏற்படும் காலிப்பணியிடம் மற்றும் ஜூலை 11-ம் தேதி நடைபெறும் பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பெறுவதால் ஏற்படும் காலிப்பணியிடம் இவற்றை கணக்கிட்டு கூடுதல் பட்டதாரி ஆசிரியர் அனைவரும் அந்தந்த மாவட்டங்களிலேயே பணி நிரவல் செய்யப்படுவர் என பள்ளிக்கல்வி இணை இயக்ககம் (பணியாளர் தொகுதி) தகவல் தெரிவித்துள்ளது.
வெளி மாவட்டத்திற்கு எந்தவொரு பட்டதாரி ஆசிரியரும், இடைநிலை ஆசிரியரும் மாறுதல் செய்யப்படமாட்டார்கள்.
இடைநிலை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு ஜூலை 15-25ம் தேதிக்குள் நடத்தி முடித்திடவும் பள்ளிக்கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது. எனவே பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு, இட மாறுதல் கலந்தாய்வு நடைபெறாது என்ற அச்சம் தேவையில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
.
அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இடைநிலை ஆசிரியர்கள் சிறப்பாசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்படவில்லை. இதனால் உயர் / மேல் நிலைப்பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.
பல்வேறு உயர் / மேல் நிலைப்பள்ளிகளில் ஒரே பாடத்திற்கு தேவைக்கு அதிகமான பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். வேறு சில பள்ளிகளில், குறிப்பிட்ட பாடங்களுக்கு ஆசிரியர் இல்லை. தமிழக பள்ளிக் கல்வித்துறை 32 வருவாய் மாவட்டங்களிலும் உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை 2012 மே மாதத்தில் கணக்கெடுத்துள்ளது. ஒரே பள்ளியில் பணியாற்றும் கூடுதல் பட்டதாரி ஆசிரியர்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு தேவையின் அடிப்படையில் பணிமாறுதல் செய்திட உத்தேசித்துள்ளது. உதாரணமாக, ஒரு பள்ளியில் வரலாறு பாடம் நடத்த தேவைக்கு அதிகமாக இரண்டு ஆசிரியர்கள் இருந்தால், அதில் ஒருவர், வரலாறு ஆசிரியர் இல்லாத பள்ளிக்கு பணியிடத்துடன் கூடிய பணியிட மாறுதல்(Deployment) செய்யப்படுவார். இதுபோல பணியிட மாறுதல் செய்த பின், காலியாக உள்ள இடங்களுக்கு மாறுதல் கவுன்சிலிங் நடக்கும்.
பெரும்பான்மையான மாவட்டங்களில் இந்தப் பணிகள் முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மூலமாக நிறைவடைந்துள்ளது. சில மாவட்டங்களில் பள்ளிகளில் குறைவான தேவையே இருப்பதால் இப்பணி முழுமை அடையவில்லை. வருகிற 28, 29-ம் தேதி நடைபெறும் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வில் ஏற்படும் காலிப்பணியிடம் மற்றும் ஜூலை 11-ம் தேதி நடைபெறும் பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பெறுவதால் ஏற்படும் காலிப்பணியிடம் இவற்றை கணக்கிட்டு கூடுதல் பட்டதாரி ஆசிரியர் அனைவரும் அந்தந்த மாவட்டங்களிலேயே பணி நிரவல் செய்யப்படுவர் என பள்ளிக்கல்வி இணை இயக்ககம் (பணியாளர் தொகுதி) தகவல் தெரிவித்துள்ளது.
வெளி மாவட்டத்திற்கு எந்தவொரு பட்டதாரி ஆசிரியரும், இடைநிலை ஆசிரியரும் மாறுதல் செய்யப்படமாட்டார்கள்.
இடைநிலை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு ஜூலை 15-25ம் தேதிக்குள் நடத்தி முடித்திடவும் பள்ளிக்கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது. எனவே பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு, இட மாறுதல் கலந்தாய்வு நடைபெறாது என்ற அச்சம் தேவையில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
.
நன்றி: தஇஆச
Tuesday 26 June 2012
தலைமை ஆசிரியர்களும் பாடம் நடத்த வேண்டும்: பள்ளி கல்வி இயக்ககம்
அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், அவர்கள் பட்டம் பெற்றுள்ள பாடத்தில், எட்டு பாட வேளைகளில் கற்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் தலைமையாசிரியர்களாக பணியாற்றுபவர்கள், வாரத்திற்கு 10 பாட வேளைகள் மாணவர்களுக்கு கற்பித்தல் பணி செய்ய வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பள்ளி தலைமையாசிரியர்கள் பலர், தங்களது அலுவலகப் பணிகளை மட்டும் பார்த்துவிட்டு, மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகளை செய்வதில்லை.
வாரத்திற்கு 10 பாட வேளைகளில், நீதி போதனை பாட வேளைகள் ஒதுக்கீடு செய்து கொள்வர். இந்த பாட வேளைகளில் கற்பித்தல் பணிகளை பலர் செய்வதில்லை. இந்நிலையில், பள்ளிக்கல்வி இயக்குனர் மணி விடுத்துள்ள சுற்றறிக்கையில், பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாரத்திற்கு 10 பாட வேளை, மாணவர்களுக்கு கற்பித்தல் பணியை தவறாது செய்ய வேண்டும்.
தலைமை ஆசிரியர்கள் எந்த பாடத்தில் பட்டம் பெற்றுள்ளனரோ அந்த பாடத்தில் குறைந்தபட்சம் எட்டு பாட வேளைகளாவது மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். மீதி இரண்டு பாட வேளைகள், நீதி போதனை போன்ற பாடங்களை கற்பித்துக் கொள்ளலாம். இதை, அனைத்து தலைமை ஆசிரியர்களும் தவறாது பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
Courtesy : Dinamalar
Sunday 24 June 2012
ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்க உள்ள ஜூலை 12ம் தேதி அன்று அனைத்து வகை பள்ளிகளுக்கும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் களாக பணி நியமனம் பெற விரும்புவோர் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. ஏற்கெனவே இந்த தேர்வு ஜூன் 4ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நிர்வாக காரணங்களுக்காக இந்த தேர்வு ஜூலை 12ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 6. லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். இதற்காக 1400 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு நடக்கும் நாள் பணி நாளாக உள்ள தால் பள்ளிகள் இயங்கும். மேலும் ஆசிரியர்களும் தேர்வு எழுதுகின்றனர். அதனால் அன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. விடுமுறை விடும் நாளுக்கு பதிலாக வேறு ஒரு நாளில் பள்ளிகள் நடத்த வேண்டும். இது சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் பொருந்தும். |
Wednesday 20 June 2012
Information on Cut-off Seniority dates adopted for nomination In Employment Offices In Tamil Nadu as on (April - 2012)
Cut-off Seniority dates for Computer Instructor and Secondary Grade Teachers
List of Candidates nominated for the post of Secondary Grade Teacher
For further enquiry the candidates may contact the Teachers Recruitment Board by referring their Nomination ID in the list. Candidates who come within the Cut off date and if their names are omitted may contact the District Employment Office concerned.
|
பள்ளிகளில் ECO- CLUB அமைக்க அரசாணை
|
Tuesday 19 June 2012
ஸ்மார்ட் கார்டு வடிவில் பஸ் பாஸ் - 35 லட்சம் மாணவர்களுக்கு இன்னும் ஒரு வார காலத்திற்குள் வழங்க உத்தரவு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், 35 லட்சம் மாணவர்களுக்கு, ஸ்மார்ட் கார்டு வடிவில் இலவச பஸ் பாஸ் வழங்கப்படவுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, தமிழக அரசு இலவச பஸ் பாஸ் வழங்கி வருகிறது. இத்திட்டத்தால், தொலை தூரத்தில் இருந்து பள்ளி செல்லும் ஏழை மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள மாணவ, மாணவியருக்கும், "ஸ்மார்ட் கார்டு&' வடிவில் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். அதன்படி, மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
இதுவரை, சென்னையில் மட்டும் ஸ்மார்ட் கார்டு வடிவில் பஸ் பாஸ் வழங்கப்பட்டு வந்தது. இதுகுறித்து, சாலை போக்குவரத்து நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது, இலவச பஸ் பாஸ் வழங்கும் பணிகளை, சாலைப் போக்குவரத்து நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
கடந்தாண்டு, 32 லட்சம் மாணவர்களுக்கு, இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டது. இந்தாண்டு, 35 லட்சம் மாணவ, மாணவியருக்கு பஸ் பாஸ் வழங்கப்படவுள்ளது. இன்னும் ஒரு வார காலத்திற்குள், அனைவருக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என்றார்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு ரேண்டம் எண் நாளை வெளியீடு
அதேபோல்,
சென்னை அரசு பல் மருத்துவ கல்லூரியில் 85 பிடிஎஸ் இடமும், தனியார் கல்லூரியில் 847 இடங்களும் உள்ளன. இந்த கல்லூரிகளில் 2012,2013ம் கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பங்கள் விற்பனை கடந்த மே 15ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை நடந்தது. மொத்தம் 40,317 விண்ணப்பங்கள் விற்பனையாகின. 28,500 பேர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வழங்கினர்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு நாளை மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தில் சுழற்சி (ரேண்டம்) எண் வழங்கப்படும். 25ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். அதை தொடர் ந்து, ஜூலை 5ம் தேதி காலை முதல் மாணவர்களுக்கான முதல் கட்ட கவுன்சலிங் தொடங்கும். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் கவுன்சலிங் நடைபெறும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
TNPSC-GROUP-4-syllabus-Question-Papers-Model
State of Tamil Nadu Announced the India’s biggest government job opportunity during the year of 2012. This examination conducted by TNPSC Examination Board. All instruction about the Group 4 examinationupdated from official websites. Question paper syllabus based on Tamilnadu state board school books from 6th standard to 12th standard. Totally 10718 vacancies are available to replace the postings.Various categories jobs applications are invited. All field vacancies details mentioned below.
1. Junior Assistant (Non – Security) – 4865 vacancies.
2. Junior Assistant (Security) – 292 vacancies.
3. Bill Collector, Grade-I – 31 vacancies.
4. Typist – 3674 vacancies.
5. Steno-Typist (Grade III) – 1128 vacancies.
6. Field Surveyor – 326 vacancies.
7. Draftsman – 402 vacancies.
2. Junior Assistant (Security) – 292 vacancies.
3. Bill Collector, Grade-I – 31 vacancies.
4. Typist – 3674 vacancies.
5. Steno-Typist (Grade III) – 1128 vacancies.
6. Field Surveyor – 326 vacancies.
7. Draftsman – 402 vacancies.
And TNPSC board announced the syllabus and attachment add from TNPSC Group 4 Examination official website.Here Find and add the model question papers for last years. Some experts are prepared and released the booklets for this examination.Collect the bellow mentioned books. This books cover all whole Syllabus,
Text Books published by Tamil Nadu Text Books Socie
Science ‐ 6, 7, 8, 9, 10th standard
Physics ‐ 11, 12th standard
Chemistry ‐ 11, 12th standard
Biology ‐ 11, 12th standard
Social Science ‐ 6, 7, 8, 9, 10 standards
History & INM ‐ 11, 12th standard
Geography ‐ 11, 12th standard
Political Science ‐ 11, 12th standard
Mathematics ‐ 7, 8, 9, 10 standards
Logic ‐ 12th standard (Old)
Science ‐ 6, 7, 8, 9, 10th standard
Physics ‐ 11, 12th standard
Chemistry ‐ 11, 12th standard
Biology ‐ 11, 12th standard
Social Science ‐ 6, 7, 8, 9, 10 standards
History & INM ‐ 11, 12th standard
Geography ‐ 11, 12th standard
Political Science ‐ 11, 12th standard
Mathematics ‐ 7, 8, 9, 10 standards
Logic ‐ 12th standard (Old)
Psychology ‐ 12th standard (Old)
Above books available below sites only.visit this sites and download all Taminadu government text book to prepare well.
thanks:http://www.way2tech.net
Subscribe to:
Posts (Atom)