Tuesday 22 May 2012

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது..
சுஷ்மிதா 


நாமக்கல் எம்.கந்தம்பாளையம் பள்ளி மாணவி சுஷ்மிதா 1200-க்கு 1189 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். 2-வது இடத்தை 3 பேர் பிடித்துள்ளனர். நாமக்கல் எம்.கண்டம்பாளையம் எஸ்கேவி பள்ளி மாணவி கார்த்திகா, நாமக்கல் கிரீன்பார்க் பள்ளி மாணவர் அசோக்குமார், நாமக்கல் பாண்டமங்கலம் விவேகானந்தா பள்ளி மாணவர் மணிகண்டன் ஆகியோர் 1188 மதிப்பெண் பெற்று 2-வது இடத்தை பெற்றுள்ளனர்.நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வித்யா விகாஷ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பி.மகேஸ்வரி, எம்.கந்தம்பாளையம் எஸ்கேவி பள்ளி மாணவி பிரபா சங்கரி ஆகியோர் 1187 மதிப்பெண் பெற்று 3-வது இடத்தை பிடித்துள்ளனர். மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடித்துள்ள 6 மாணவ, மாணவிகளும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அவர்கள் அனைவருமே நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
MyFreeCopyright.com Registered & Protected