GHSS BARUR
அறிவியல் கண்காட்சி: பாரூர் அரசுப் பள்ளி முதலிடம்
தருமபுரி, நவ. 29: கிருஷ்ணகிரி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் பாரூர் அரசுப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.
இந்த கண்காட்சி கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை நடைபெற்றது. அமைச்சர் கே.பி.முனுசாமி தொடங்கி வைத்தார். மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்களது படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர். பாரூர் அரசுப் பள்ளி மாணவர்கள் ஹரி விக்னேஷ், ஜெயராஜ், கெüதம்ராஜ், அன்பரசு ஆகியோரும் தங்களது படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர். இதில், சிறந்த கணித அறிவியல் படைப்புப் பிரிவில் ஹரி விக்னேஷ் முதலிடம் பிடித்தார். இவருக்கும், வழிகாட்டி ஆசிரியரான என்எஸ்எஸ் திட்ட அலுவலர் முரளிக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூர்த்தி பரிசு வழங்கினார்.
மாவட்டக் கல்வி அலுவலர் மார்ஷ், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த கண்காட்சி கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை நடைபெற்றது. அமைச்சர் கே.பி.முனுசாமி தொடங்கி வைத்தார். மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்களது படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர். பாரூர் அரசுப் பள்ளி மாணவர்கள் ஹரி விக்னேஷ், ஜெயராஜ், கெüதம்ராஜ், அன்பரசு ஆகியோரும் தங்களது படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர். இதில், சிறந்த கணித அறிவியல் படைப்புப் பிரிவில் ஹரி விக்னேஷ் முதலிடம் பிடித்தார். இவருக்கும், வழிகாட்டி ஆசிரியரான என்எஸ்எஸ் திட்ட அலுவலர் முரளிக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூர்த்தி பரிசு வழங்கினார்.
மாவட்டக் கல்வி அலுவலர் மார்ஷ், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment