Friday 13 April 2012

கல்வி உரிமைச் சட்டம்-உச்சநீதிமன்றம் தீர்ப்பு


2009-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கல்வி உரிமைச் சட்டத்தின் பல்வேறு விதிமுறைகள் செல்லத்தக்கவை தான் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கல்வி உரிமைச் சட்டம் அரசு உதவிபெறாத சிறுபான்மையினர் பள்ளிகளைத் தவிர இதர அனைத்துப் பிரிவு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அனைத்துப் பள்ளிகளும் 25 விழுக்காட்டு இடங்களை ஏழைக் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தெளிவுபடுத்தியுள்ளது.
இந்தத் தீர்ப்பு இன்றுமுதலே நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சிறுபான்மை அமைப்புகளால் நடத்தப்படும் நிறுவனங்களுக்கும், அரசிடம் இருந்தோ, உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்தோ நிதி உதவி பெறாத நிறுவனங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

MyFreeCopyright.com Registered & Protected