Wednesday 16 May 2012

கட்டாய கல்வி உரிமைச்சட்டம் : விழிப்புணர்வு ஏற்படுத்த கமிட்டி


கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், வட்டார அளவில் 30 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்படுகிறது.

மத்திய அரசு அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இச்சட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வட்டார அளவில் 30 பேர் கொண்ட விழிப்புணர்வு கமிட்டி அமைக்கப்படுகிறது.

இக்கமிட்டியில், என்.எஸ்.எஸ்., என்.சி.சி., ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், என்.எஸ்.எஸ்.,மாணவர்கள், பெற்றோர்கள், என்.ஜி.ஓ.,க்கள், மகளிர் சுய உதவி குழுவினர், ஆசிரிய பயிற்சி மாணவர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், ஒரு ஆசிரியர் பயிற்சி நிறுவன பயிற்றுநர் இடம் பெறுகின்றனர். இக்கமிட்டி 3 பேர் கொண்ட 10 குழுக்களாக பிரிந்து சென்று குடியிருப்பு பகுதிகளில், நாடகங்கள், பாட்டு,தெருக்கூத்து மூலம் கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்து விளக்குகின்றனர். பேனர்கள் வைத்தும், துண்டு பிரசுரங்கள் மூலமும் மக்களுக்கு தெரிவிப்பார்கள்.

ஜூன் முதல் வாரம் துவங்கி ஆண்டு முழுவதும் முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

நன்றி:

No comments:

Post a Comment

MyFreeCopyright.com Registered & Protected